க-து:
பொருள் : தான் என்னும் படர்க்கைப் பெயரும் யான் என்னும்தன்மைப் பெயரும் உருபுபுணர்ச்சிக்கு ஓதியவாறு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் நின்று புணரும்.
அஃதாவது தான் என்பது நெடுமுதல் குறுகியும், யான் என்பது ஆகாரம்எகரமாய் யகரமெய் கெட்டும், நிற்கும் என்றவாறு.
எ - டு: தன்கை; என்கை, செவி, தலை, புறம் எனவரும். ஞாண், நூல்,மணி, வட்டு, அணி என்பனவற்றொடும் கூட்டிக் கண்டுகொள்க.