சூ. 353 :

வேற்றுமை யல்வழிக் குறுகலும் திரிதலும்

தோற்ற மில்லை என்மனார் புலவர்

(58)
 

க-து:

மேற்கூறிய தான்யான் என்பவை அல்வழிக்கண் புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள் :  அதிகாரத்தான்  நிற்கும்  தான்யான்  என்னும்  பெயர்கள்
அல்வழியாற் புணருமிடத்து நெடுமுதல் குறுகலும் திரிதலுமின்றி இயல்பாகப்
புணரும்.
 

எ - டு:  தான்  குறியன்,  சிறியன்,  தீயன், பெரியன்  எனவும்  யான்
குறியேன், சிறியேன், தீயேன், பெரியேன் எனவும் வரும்.
 

‘தோற்றம்’  என்றதனான்  - வேற்றுமைக்கண்  தற்புகழ், எற்புகழ்  என
னகரந் திரிதலும்  கொள்க  என்பார்  உரையாளர். மாட்டேறு  முதனிற்கும்
எழுத்துப் பற்றியதாகலின் னகரத் திரிபு பொதுவிதியாற் பெறப்படுமென்க.