முன்றில் என்னும் சொல் இலக்கணமரூஉவாய் வருமென்கின்றது.
பொருள் : முன் என்னும் சொற்கு முன்னர்வரும் இல் என்னும் சொல்லுக்கு மேல் ஒரு றகர ஒற்றுத் தோன்றி நிற்றல் பழைய இயல்பினை உடைய வழக்கின்கண் மருவி வந்த மரபாகும்.
எ - டு: முன்ற் + இல் = முன்றில் எனவரும். இல் முன் எனற்பாலது மாறி நின்றுழி முன்னில் என ஏறி முடியாமல் ஒரு றகர ஒற்றுப் பெற்றுமுடிதலின் மரூஉவாயிற்றென்க.