சூ. 361 :அல்வழி யெல்லாம் இயல்பென மொழிப
(66)
 

க-து:

யகர ஈற்று அல்வழி முடிபாமாறு கூறுகின்றது.
 

பொருள் :  யகரஈற்றுப்  பெயர்  எல்லாம்  அல்வழிக்கண் இயல்பாகப்
புணரும் என்று கூறுவர் புலவர்.
 

எ - டு:  நாய்  குறிது,  சிறிது,  தீது,  பெரிது  எனவரும்.  ‘எல்லாம்‘
என்றதனான்  தாய்ச்சென்றான்,  போய்ப்பெற்றான்  என வினையெச்சத்தின்
கண்ணும் பொய்ச்சொல், மெய்ப்பொருள் என இருபெயரொட்டின்  கண்ணும்
மிகுதல் கொள்க.