சூ. 369 :

தகரம் வரும்வழி ஆய்தம் நிலையலும்

புகரின் றென்மனார் புலமை யோரே

(74)
 

க-து:

லகரம் ஆய்தமாகத் திரியுமிடங் கூறுகின்றது.
 

பொருள் :  லகர   ஈற்றுச்   சொல்   வருமொழி  தகரமாகியவிடத்து
ஆய்தமாகத்திரிந்து  நிற்றலும் குற்றமின்றென்பார். உம்மை இறந்தது தழீஇய
எச்ச உம்மை.
 

எ - டு:  கல் + தீது = கஃறீது, அஃறிணை எனவரும்.
 

வருமொழித்திரிபு தொகைமரபினுட் பெறப்படும் (தொகை-8) பஃறாழிசை,
பஃறொடை என விதியீறாகி நின்ற லகரத்திற்கும் இவ்விதி ஒக்கும். ஏற்புழிக்
கோடல்  என்பதனான்  இத்திரிபு குறில் வழிநின்ற லகரத்திற்கேயாகும் என
அறிக.