சூ. 374 :

நாயும் பலகையும் வரூஉங் காலை

ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே

உகரங் கெடுவழி அகரம் நிலையும்

(79)
 

க-து:

வல்லென்னும் சொற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :  மேற்கூறிய  வல்லென்னும் சொன்முன்னர்  நாய்,  பலகை
என்னும்   சொற்கள்   வந்துபுணரின்,  அவ்விடத்து   மேற்கூறிய  உகரங்
கெடுதலும்   உரித்தாகும்.   உகரம் கெடுமிடத்து  ஆண்டு  அகரம்  வந்து
நிலைபெறும்.
 

எ - டு:  வல்லநாய், வல்லப்பலகை எனவரும். உம்மையான் வல்லுநாய்,
வல்லுப்  பலகை  எனவும்  வரும். நாய்  என்பது சூதுஆடும் கருவியாகிய
காய்களை. இவை  வல்லினுள் நாய் எனவும்  வல்லுக்குரிய பலகை எனவும்
விரியும்.