|
சூ. 375 : | பூல்வேல் என்றா ஆல்என் கிளவியொடு | | ஆமுப் பெயர்க்கும் அம்இடை வருமே | (80) | க-து: | சில லகரஈற்றுப்பெயர் அம்முச்சாரியை பெறுமென்கின்றது. | பொருள்: பூல், வேல், ஆல் என்னும் அம்மூன்று பெயர்கட்கும் அம்முச்சாரியை இடையே வரும். | எ - டு: பூலங்கோடு, வேலங்கோடு, ஆலங்கோடு-செதிள், தோல், பூ எனவரும். இவை மூன்றும் மரப்பெயர். | வருமொழி வரையாமையான் பூலஞெரி, வேலஞெரி, ஆலஞெரி-நிழல், முறி, விறகு என ஏனைக்கணத்தும் அம்முப் பெறுதல் கொள்க. பூலாங்கோடு, பூலாங்கழி என ஆம்சாரியையும் வருமென்பார் உரையாளர். அஃது வழூஉவழக்காகலின் ஏலாது. சான்றோர் வழக்காயின் வழுவமைதியாகப் புறனடைப் பாற்படுத்துக் கொள்க. |
|