சூ. 378 :

சுட்டு முதலாகிய வகர இறுதி

முற்படக் கிளந்த உருபியல் நிலையும்

(83)
 

க-து:

வகர ஈற்றுப்  புணர்ச்சி  விதி  கூறுவான்  தொடங்கி அவ்  ஈறு
நான்கே  சொற்களில் வருதலின்  அவற்றை  விதந்து  கூறுவார்.
வகர  ஈற்றுச் சுட்டுப் பெயர் மூன்றும்  உருபுபுணர்ச்சிக்கு  ஓதிய
இயல்பினவாய் நிலைபெறும் என்கின்றார்.
 

பொருள் :  சுட்டெழுத்துக்களை முதலாக உடைய வகர ஈற்றுச் சுட்டுப்
பெயர்,  முன்னர்க்கிளந்தோதிய  உருபு   புணர்ச்சிக்குரிய   இயல்பினவாய்
நிற்கும். அஃதாவது; வற்றுச் சாரியை பெற்றுப் புணரும் என்றவாறு.
 

எ - டு:  அவற்றுக்கோடு,   இவற்றுக்கோடு,   உவற்றுக்கோடு;  செவி,
தலை, புறம் எனவும்; அவற்று  ஞாற்சி, நீட்சி,  மாட்சி,  வன்மை  எனவும்
வரும்.
 

முற்படக்   கிளந்த   என்றதனான்  வற்றொடு இன்சாரியையும் ஒருங்கு
பெற்று   அவற்றின்  கோடு,  இவற்றின்  கோடு,  உவற்றின்  கோடு என
வருதலும் கொள்க.