சுட்டுவகரஈறு மெல்லெழுத்தொடு புணருமாறு கூறுகின்றது.
பொருள் :வகர ஈற்றுச் சுட்டுப் பெயர் மெல்லெழுத்தொடு இயையின் வந்த மெல்லெழுத்தாகத் திரியும்.
எ - டு:அஞ்ஞாண்கள், அந்நூல்கள், அம்மலர்கள் என வரும். நிலைமொழி, பன்மைச் சொல் என்பது விளங்க வருமொழி ஈற்றின்கண் கள்விகுதி கூட்டிக்கூறுதல் தகவுடைத்தென்க. என்னை? அ, இ, உ என்னும் சுட்டுக்களொடு மெல்லெழுத்துப் புணரினும் அவையும் அந்நூல் என்றே வருமாதலின் என்க.