சூ. 383 :ழகார இறுதி ரகார இயற்றே 
(88)
 

க-து:

ழகார ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் :  ழகார  ஈற்றுப் பெயரிறுதி வன்கணம்வரின் ரகார ஈற்றிற்கு
ஓதிய இயல்பிற்றாய் மிக்குப்புணரும்.
 

எ - டு:  பூழ்க்கால், செவி, தலை, புறம் எனவரும்.
 

ரகார ஈற்றுச்  சூத்திர உரையுள் அல்வழிக்குக் கூறியவிளக்கம் இதற்கும்
ஒக்குமாதலின், ழகார ஈற்று அல்வழிக்கண் யாழ் குறிது, சிறிது, தீது, பெரிது
என வல்லெழுத்து இயல்பாக முடியுமெனக் கொள்க. சிறுபான்மை வீழ்குறிது
-   வீழ்க்குறிது   என   உறழ்ந்து   முடிதலையும்   பூழ்ப்பறவை   என
இருபெயரொட்டின்கண்  மிக்கு  முடிதலையும்  உரையிற்கோடல்  என்னும்
உத்தியாற் கொள்க.