ரகார ஈற்றுச் சூத்திர உரையுள் அல்வழிக்குக் கூறியவிளக்கம் இதற்கும் ஒக்குமாதலின், ழகார ஈற்று அல்வழிக்கண் யாழ் குறிது, சிறிது, தீது, பெரிது என வல்லெழுத்து இயல்பாக முடியுமெனக் கொள்க. சிறுபான்மை வீழ்குறிது - வீழ்க்குறிது என உறழ்ந்து முடிதலையும் பூழ்ப்பறவை என இருபெயரொட்டின்கண் மிக்கு முடிதலையும் உரையிற்கோடல் என்னும் உத்தியாற் கொள்க. |