சூ. 385 :தமிழென் கிளவியும் அதனோ ரற்றே 
(90)
 

க-து:

தமிழ் என்னும் சொல்லும் அக்குப்பெற்று முடியும் என்கின்றது.
 

பொருள் :தமிழ்  என்னும்  ழகர ஈற்றுச்  சொல்லும் தாழ்  என்பதற்கு
ஓதியாங்கு அக்குச்சாரியை பெற்றுப் புணரும்.
 

எ - டு: தமிழக்கூத்து, செய்தி, தூய்மை, பாணி எனவரும். தமிழிற்குரிய
கூத்து என நான்காவது விரிக்க. ஆரியக்கூத்து   அன்று    என்றவாறாம்.
உடைமைப்   பொருள்   விரிக்கின்      இச்சாரியை     ஆறனுருபாய்
மயக்கஞ்செய்யுமென்க.
 

மேலைச்சூத்திரத்து எதிர்மறை உம்மையான் தமிழ்க்கூத்து, தமிழ்ச்செய்தி
எனச் சாரியை இன்றியும் பொதுவிதியாற் புணருமென்க.
 

கோலொடு   புணரின்   என்றாற்போல  இதற்கு  வருமொழி வரைந்து
கூறாமையான் ஏனைக்கணம்வரினும், சாரியைப் பேறு கொள்க.
 

எ - டு:   தமிழஞாலம்,    தமிழநூல்,    தமிழமரபு,    தமிழவாழ்வு,
தமிழவரையர் எனவரும்.