ஏழு என்னும் திரிபுற்றசொல் ஆயிரம் வருமிடத்து இயல்பாகுமென்கின்றது.
பொருள் :ஏழு என விதியீறாய் நின்றசொல்லின்முன் ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர்வரின் உகரம் கெடும்.
எழு என்பதன்கண் உகரம் கெட்ட வழி ‘ழ’கர ஈறு குறிற்கீழ் ஒற்றாக நிற்றற்கு ஏலாமையான் முதல் நீளும் என்பது உய்த்துணரப்படுமாதலின் எடுத்துக் கூறாராயினர் என அறிக.