சூ. 392 : | நூறூர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக் |
| கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே |
(97) |
க-து : | நூறாயிரம் என்னும் சொல் வருமிடத்து ஏழ் என்னும் சொல் இயல்பாக நின்றுபுணருமென்கின்றது. |
பொருள்: ஏழு என்னும் சொல் நூறு என்பதனைத் தொடர்ந்து வரும் ஆயிரம் என்னும் தொகைமொழிக்கு மேற் பொதுவிதியாகக் கூறிய நெடுமுதல் குறுக்கம் இல்லை. உகரக் கேடு மேலைச் சூத்திரத்துக் கூறப்பட்டது. |
எ - டு: எழு + நூறாயிரம் = ஏழ்நூறாயிரம் எனவரும். ‘கூறிய’ என்றதனான் சிறுபான்மை எழுநூறாயிரம் எனவருதலும் கொள்க. |