க-து:
பொருள்: ஏழ் என்னும் சொல் தன்முன்னர் மேற்கூறியசொற்களேயன்றி உயிர்முதன் மொழிவரினும் இயல்பாகுமென மேற்கூறியஅவ்விலக்கணத்தின் மாறுபடாது.
எ - டு: ஏழுழக்கு, ஏழகல், ஏழிலை, ஏழுரி, ஏழிரண்டு, ஏழைந்துஎனவரும். இங்ஙனம் எல்லாப்பெயரொடும் ஒட்டிக் கொள்க. ஏழிருபது,ஏழெழுபது என அடையொடுவரினும் ஒக்கும்.