சூ. 397 :மெல்லெழுத் தியையின் ணகார மாகும்
(102)
 

க-து:

ளகர ஈறு மென்கணம் வரின் திரியுமாறு கூறுகின்றது.
 

பொருள்:  ளகர  ஈற்றுப்  பெயர்  மெல்லெழுத்துவரின்  ணகரமாகத்
திரியும்.
 

எ - டு: முண்ஞெரி,     முண்ணுனி,     முண்மரம்     எனவரும்.
ளகரப்புள்ளிமுன்  கசபவய என்பவையன்றிப் பிறமெய்கள்  மயங்காமையின்
அல்வழியினும் மெல்லெழுத்துவரின் இத்திரிபு எய்துமெனக் கொள்க.
 

எ - டு:  முண்ஞான்றது,  முண்ணீண்டது,  முண்மாண்டது  எனவரும்.
இஃது உய்த்துக்கொண்டுணர்தல் என்னும் உத்தி.