சூ. 398 :அல்வழி யெல்லாம் உறழென மொழிப 
(103)
 

க-து:

ளகர ஈற்று அல்வழிப்புணர்ச்சியாமாறு கூறுகின்றது.
  

பொருள்: ளகரஈறு   எல்லாம்   அல்வழிக்கண்  இயல்பும் திரிபுமாக
உறழ்ந்து வருமென்று கூறுவர் ஆசிரியர்.
 

எ - டு:  முள்கடிது - முட்கடிது, சிறிது, தீது, பெரிது  எனவரும். புள்,
பொருள் முதலாயவற்றொடும் கூட்டிக் கண்டு கொள்க.