|
சூ. 407 : | அவற்றுள், | | ஈரொற்றுத் தொடர்மொழி இடைத்தொட ராகா | (2) | க-து : | தொடர்மொழி ஐந்தனுள் வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் யரழக்களை அடுத்து வருங்கால் எய்தும் ஐயம் நீக்குகின்றது. | பொருள்: மேற்கூறியவற்றுள் இடையெழுத்துக்கள் வல்லெழுத்தையும் மெல்லெழுத்தையும் தொடர்ந்து ஈரொற்றாய் நிற்கும் தொடர்மொழி இடைத்தொடராகா. வன்றொடராகவோ, மென்றொடராகவோ ஆகும். | எ - டு: வாய்ப்பு, ஈர்க்கு, காழ்ப்பு - இவை வன்றொடர். |
மொய்ம்பு எனவும் ஆர்ந்து, சூழ்ந்து எனவும் வரும். இவை மென்றொடர். எனவே சார்பு, உல்கு, வெய்து, போழ்து, தெள்கு என இடைத்தொடர் ஓரொற்றாயே வரும் என்பதாயிற்று. வகரம் வல்லொற்றொடு மயங்காமையின் இடைத்தொடர் மேற்கூறிய ஐந்துவகையாகவே வரும் என அறிக. |
|