குற்றெழுத்து நின்று இசை நிறைக்கும் என்றதனான், அது பொருள் பயவாது என்பது பெறப்படும். அதனான் நெட்டெழுத்தின் ஓசையொடு குற்றெழுத்தின் இசையைச் சேர்த்து நீட்டிக்கொள்க என்பது கருத்தாதல் உணரப்படும். எழுத்தென்றது ஒலிஉருவை. வரிவடிவின்கண் அடையாளமாக அமையும். |
எ-டு: | ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை |
| ஆஅதும் என்னு மவர் (குறள்-365) எனவரும். |
தமிழ்மொழியில் மூன்று மாத்திரை நான்கு மாத்திரை எழுத்துக்கள் வகுக்கப்படாமையின் ஒத்த குற்றெழுத்து இசை நிறைக்கும் என்றும், இங்ஙனம் அளபெடுப்பது நெட்டெழுத்தே என்றும் அறிவிக்க ‘நெட்டெழுத்திம்பர்’ என்று கூறினார். |
ஒத்த குற்றெழுத்து என ஈண்டு ஒருமைவாய்பாட்டாற் கூறி நூன்மரபின்கண் “அவ்வளபுடைய கூட்டி எழூஉதல்” என்றதனான் குற்றெழுத்தின் ஓசை ஒவ்வொன்றாக இணைந்திசைக்கும் என்பதும் அவ்வாறே வரிவடிவம் எழுதிக் கொள்ள வேண்டுமென்பதும் உய்த்துணரவைத்தார். |
எ-டு: | உறாஅர்க் குறுநோய் உரைப்பாய்க் கடலைச் |
| செறாஅஅய் வாழிய நெஞ்சு (குறள். 1200) எனவரும். |
இயற்றமிழ்ச் செய்யுட்கண் நான்கு மாத்திரையினும் ஓர் எழுத்துமிகாது என்க. |