ஒற்றிடை இனமிகா மொழியுமா ருளவே
அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகுதி
க-து:
பொருள் : மேற்கூறிய இருவகை மொழிகளுள் இடையே இன ஒற்றுமிகாத மொழிகளும் உள. அவ்வகை மொழிகளிடத்து வருமொழிவல்லெழுத்து மிகுதல் இல்லை.
எ - டு: நாகுகால், செவி, தலை, புறம் எனவும்; வரகுகதிர், சினை,தாள், பதர் எனவும் வரும்.