இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும்
நடையா யியல என்மனார் புலவர்
க-து:
பொருள் : இடைத்தொடர் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரங்கள்வேற்றுமைக்கண் வல்லெழுத்தொடு புணருமிடத்து மேற்கூறியஅவ்வியல்பினவாம் எனக் கூறுவர் புலவர். என்றது; இயல்பாகப்புணருமென்றவாறு.
எ - டு: தெள்குகால், சினை, தலை, புறம் எனவும் எஃகு, கடுமை,சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும்.