|
சூ. 415 : | மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை | (10) | | க-து: | குற்றுகர ஈற்று மரப்பெயர்கட்கு அம்முச் சாரியை வரும் என்கின்றது. | பொருள் : குற்றியலுகர ஈற்று மரப்பெயர்ச்சொற்களுக்கு அம்முச் சாரியை வரும். ஏகாரம் இசைநிறை. |
எ - டு: தேக்கங்கோடு - வேப்பங்காய், செதிள், தோல், பூ எனவரும். தன்னினமுடித்தல் என்னும் உத்தியான் மரத்திற்கு இனமாகிய புல்லும், பூடும் ஆகியவற்றிற்கும் இவ்விதி கொள்க. | எ - டு: கமுகங்காய், சீழ்கம்புல், கம்பந்தாள், அடும்பங்கொடி எனவும் நாற்றங்கால், பயிற்றங்காய் எனவும்வரும். | இந்நூற்பா மரமல்லனவற்றை மாறுகொளக் கூறல் எனத் தழீஇக் கொண்ட சிதைவென்பார் பேராசிரியர். |
|