சூ. 416 :மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே(11)
 

க-து:

மரப்பெயர்களுள்   சிலவற்றிற்கு   எய்தியது ஒரு    மருங்கு
விலக்குகின்றது.
 

பொருள் : மென்றொடர்            மொழியுள்    கிளையொற்றாகத்
திரியுமென்றவற்றுள்     அங்ஙனம்   திரியாமல்    அம்முச்சாரியையொடு
வரும் மரப்பெயர்களும் உளவாம்.
 

எ - டு: குருந்தங்கோடு; புன்கங்காய்,  செதிள், தோல்,  பூ  எனவரும்.
உம்மையான்      வல்லெழுத்தாகத்    திரிந்து   சாரியை   பெறுவனவே
பெரும்பான்மை என்க. எ - டு:வேப்பங்காய்,  கடப்பங்கோடு  எனவரும்.
இன்னும் அதனானே மரமல்லாத புல்லும்   தெங்கங்காய்,    கருப்பஞ்சாறு
எனவருதலும் கொள்க.