சூ. 417 : | ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் |
| அம் இடை வரற்கும் உரியவை யுளவே |
| அம்மர பொழுகும் மொழிவயி னான |
(12) |
க-து : | ஒருசார் ஈரெழுத்து மொழியும் வன்றொடர்மொழியும் அம்முச்சாரியை பெறும் என்கின்றது. |
பொருள் : நெடிற்றொடர் மொழி, வன்றொடர் மொழிகளுள் அம்முச்சாரியை இடையே வருதற்கு உரியவையும் உள. அங்ஙனம் வருதல் அம்மரபினான் நடைபெறும் மொழிகளிடத்தேயாம். உம்மை எதிர்மறை. |
எ - டு: ஏறங்கோள், சூதம்போர் எனவும் வட்டம்போர் எனவும் வரும். நாகுகால், கொக்குக்கால் இவை போல்வன அம்முப்பெறாதன. “அம்மர பொழுகும் மொழிவயி னான” என்றதனான் சிறுபான்மை விளக்கத்துக் கொண்டான் என அத்துச்சாரியை பெறுதலும் கொள்க என்றார் உரையாசிரியர். |