சூ. 419 :எண்ணுப் பெயர்க்கிளவி உருபியல் நிலையும்(14)
 
க-து:எண்ணுப்    பெயர்கள்   பொருட்பெயர்களொடு    புணருமாறு
கூறுகின்றது.   எண்ணுப்  பெயர்கள், நெடிற்றொடர், வன்றொடர்,
மென்றொடர்    ஆகிய    மூவகையானும்    வருதலின் அவை
எல்லாம் கொள்க.
 

பொருள் :மூன்றீற்றுக்   குற்றியலுகர   எண்ணுப்  பெயர்ச்   சொற்கள
பொருட்புணர்ச்சிக்கண்   உருபுபுணர்ச்சிக்கு   ஓதியாங்கு     அன்சாரியை
பெற்று நிற்கும்.
 

எ-டு: ஆறன்காயம், நூறன்காயம்,    எட்டன்காயம்,    ஒன்றன்காயம்,
ஐந்தன்காயம் எனவரும். சுக்கு, தோரை,   பயறு,   ஞாண்,   நூல்,  மணி,
வட்டு, அடை, ஆடை என ஏனை    எழுத்தொடும்   கூட்டிக்   கொள்க.
ஆறன்காயம் = ஆறனாற் கொண்ட காயம் என வேற்றுமைப்   பொருள்பட
விரிக்க.