மேல்நூற்பாவில் ஒத்த குற்றெழுத்து என விதந்தமையான் இனக்குற்றெழுத்தில்லாத ஐகார ஒளகாரங்களைப்பற்றி எழும் ஐயம் நீங்க இகர உகரம் இசை நிறைவாகும் என்றார். அதனான் இவ்இரண்டு உயிரெழுத்துக்களும் அகரத்திற்றொடங்கி முறையே இகர உகரங்களாகி முடியும் விகார எழுத்துக்கள் என்பதை உய்த்துணரவைத்தார் என்க. |