சூ. 423 :

முன்னுயிர் வருமிடத்து ஆய்தப் புள்ளி 

மன்னல் வேண்டும் அல்வழி யான  

(18)
 

க-து:

ஆய்தத்       தொடர்ச்     சுட்டுப்பெயர்      அல்வழிக்கண்
உயிர்முதன்மொழியொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  ஆய்தத்தொடர்     மொழியாகிய   சுட்டுப்    பெயர்கள்,
அல்வழிக்கண் உயிர்முதன்மொழி வந்து புணருமிடத்துச் சாரியை வருங்கால்
கெடுமென்ற ஆய்த எழுத்துக் கெடாது நிலைபெறல் வேண்டும்.
 

எ-டு: அஃது, இஃது, உஃது என நிறுத்தி அணி, ஆடை, இலை, ஈயல்,
உரல், ஊர்தி, எழு, ஏனை,    ஐயம்,   ஒழுக்கம்,    ஓங்கல்,   ஒளவியம்
என்பவற்றைக் கூட்டி அஃதணி, அஃதாடை என முறையே வருமாறு கண்டு
கொள்க.