சூ. 425 :அல்லது கிளப்பின் எல்லா மொழியும் 

 

சொல்லிய பண்பின் இயற்கை யாகும் 
(20)
 

க-து:

வன்றொடர்  அல்லாத   மொழிகள்   அல்வழிக்கண் புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:  வன்றொடர் அல்லாத  ஏனை   ஐந்தீற்றுக்    குற்றியலுகர
மொழிகள் யாவும்    அல்வழியாற்    புணருமிடத்து   முதனூலாசிரியராற்
சொல்லப்பட்ட முறைமையானே இயல்பாகப் புணரும்.
 

“வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே” என  மேற்கூறுதலின்
எல்லா மொழியும் என்றது அஃதொழிந்த ஏனைய ஐந்து மெனக் கொள்க.
 

எ-டு:  நாகு-வரகு-தெள்கு - எஃகு-விலங்கு     எனநிறுத்திக்   கடிது,
சிறிது, தீது,  பெரிது     எனக்கூட்டி     இயல்பாமாறு    கண்டுகொள்க.
ஏனைக்கணங்கள் இயல்பாமாறு தொகைமரபினுள் (சூ. 2) கூறப்பட்டது.
 

“சொல்லிய பண்பின்” என்றதனான், பெயர்ச்சொற்களேயன்றி   ஏனைச்
சொற்களுள் முற்றுவினைக்கண்; கிடந்தது குதிரை; கரியது குதிரை, செந்நாய்,
தகர், புல்வாய் எனவும், வினை எச்சத்தின்கண் இருந்து கொண்டான்; கண்டு
கொண்டான், சென்றான், தந்தான்,    போயினான்   எனவும்,   ஏழாவதன்
பொருட்டாய்    வரும்    இடப்பெயர்,   காலப்பெயர்களிடத்து,   அங்கு
கொண்டான், இங்கு கொண்டான்; முந்து கொண்டான்,  பண்டுகொண்டான்,
சென்றான், தந்தான், போயினான் எனவும் உரிச்சொற்கள்  பழுதுபயமின்றே,
முழுது கற்றான், வறிது சிறிதாகும்   எனவும்   இயல்பாகப்   புணருமெனக்
கொள்க.