எ-டு: கொக்குக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். இனிக் கற்றுக் கொண்டான், உய்துச் சென்றான் என வினையெச்சத்தின் கண்ணும், மற்றுச்சொல்நோக்காது என இடைச்சொற்கண்ணும் சிவப்புக்காந்தள் என உரிச்சொற்கண்ணும் மிக்கது. சிவப்பாகிய காந்தள் எனப் பண்புருபு விரித்துக் கொள்க. |