சூ. 428 :யாவினா மொழியே இயல்பு மாகும்(23)
 
க-து:யாவினா மொழிக்குப் புறனடை கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறியவற்றுள்      யாவினாமொழி     வல்லெழுத்து
மிகுதலேயன்றி இயல்பாயும் புணரும். ஏகாரம் பிரிநிலை.
  

எ-டு:  யாங்கு  கொண்டான்,   சென்றான்,    தந்தான்,  போயினான்
எனவரும். யாண்டு என்பதனொடும் ஒட்டிக்கொள்க. இது  யாங்கனம் எனப்
பண்புப்பொருட்டாக வரும் காலையே  இயல்பாகும்,  இடப்  பொருளாயின்
மிகுமென அறிக.