சூ. 43 :நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி 
(10)
 

க-து:

இனிமொழிமரபிற்குரிய    இலக்கணங்கூறத்   தொடங்கி  இச்
சூத்திரத்தான் எழுத்தினான் மொழியாமாறு கூறுகின்றார்.
 

பொருள்தனித்து ஓரெழுத் தொருமொழியாகி வருவன நெட்டெழுத்து
ஏழுமேயாம்.
 

எ-டு :  ஆ, ஈ, ஊ, ஏ,  ஐ, ஓ, ஒள  எனவும்  கா, நீ, பூ, பே, கை,
வௌ எனவும் வரும்.
 

‘‘மெய்யொடு  இயையினும்  உயிரியல்திரியாது’’  ‘‘உயிர்மெய்   யல்லன
மொழி  முதலாகா’’   ‘‘உயிர்மெய்   யீறும்  உயரீற்   றியற்றே’’  என்பன
முதலாயவற்றான் நெட்டெழுத்தென்றது  உயிர்மெய்யினையும்  அகப்படுத்து
நின்றதென்க. ஏழும் என்னும் முற்றும்மை விகாரத்தாற்றொக்கது.