சூ. 431 :இருதிசை புணரின் ஏயிடை வருமே(26)
 
க-து :குற்றுகர    ஈற்றுத்   திசைப்பெயர்கள்  தம்முட்     புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:  இருவேறு  பெருந்திசைகளை    உணர்த்தும்    சொற்கள்
தம்முட்புணரின் ஏ என்னும் சாரியை இடையே வரும்.
 

எ-டு: தெற்கே வடக்கு, வடக்கே  தெற்கு,  கிழக்கே  மேற்கு, மேற்கே
கிழக்கு எனவரும். இவற்றிற்கு உம்மை விரிக்க.
 

ஏ இடைவருமே என்பதனைப் படுத்தலோசையாற் கூறிச் சாரியை இன்றியும்
சிறுபான்மை வழங்கும் எனக்   கொள்க.   தெற்குவடக்கு,   கிழக்குமேற்கு
எனவரும். வடக்கொடு தெற்குப்  புணருமிடத்தும்,   மேற்கொடு   கிழக்குப்
புணருமிடத்தும் சாரியை பெற்றே வரும்.