பொருள்: ஒன்று என்னும் சொல் முதலாக எட்டு என்னும் சொல்லீறாக உள்ள எல்லா எண்ணுப் பெயர்களும், பத்து என்னும் சொல்லின் முன்வந்து புணரின், பத்து என்பதன்கண் உள்ள குற்றியலுகரம் தான் ஊர்ந்து நிற்கும் மெய்யொடு கெடும். இரண்டு என்னும் எண்ணுப் பெயர் தவிர்ந்த ஏனையவற்றிற்கு இன்சாரியை முழுமையாக வரும். |
எ-டு: பத்து+ ஒன்றுடிபத்+ இன் + ஒன்றுடிபதினொன்று - பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு எனவரும். பதினான்கு என்புழிச் சாரியையினது னகரக்கேடு ‘‘நெடியதன் முன்னர்’’ (தொகை-18) என்னும் விதியாற் கெட்டதென அறிக. |