சூ. 435 :ஆயிரம் வரினும் ஆயியல் திரியா(30)
 
க-து:பத்தொடு ஆயிரமென்னும் சொல் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  பத்து என்னும் சொல்லின்முன் ஒன்று முதலாயினவே யன்றி
ஆயிரம் என்னும் சொல் வந்து   புணரினும்   அவ்விலக்கணத்திற்றிரியாது.
அஃதாவது; ஈறுகெட்டு இன்சாரியை பெறும் என்றவாறு.
 

எ-டு: பத்து + ஆயிரம் டி பதினாயிரம் எனவரும். பத்தாயிரம் என்பது
வழூஉ வழக்கு.