சூ. 437 : | ஒன்றுமுதல் ஒன்பான் இறுதி முன்னர் |
| நின்ற பத்தன் ஒற்றுக்கெட ஆய்தம் |
| வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப |
| கூறிய இயற்கை குற்றிய லுகரம் |
| ஆறன் இறுதி அல்வழி யான |
(32) |
க-து: | ஒன்று முதல் ஒன்பானீறாகிய எண்ணுப்பெயரொடு பத்து என்னும் சொல் வந்து புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: ஆறு என்னும் சொல்லிறுதி அல்லாத, ஒன்று முதல் ஒன்பான் ஈறாக நிற்கும் எண்ணுப் பெயரிறுதி முன்னர் வருமொழியாக வந்து புணர்ந்த பத்து என்னும் சொல்லுள் நின்ற தகர ஒற்றுக் கெட ஆய்தம் வந்து அவ்விடத்து நிலைபெறும் இயல்பிற்று; என்று கூறுவர் புலவர். நிலை மொழியீற்றுக் குற்றியலுகரம் மேற்கூறிய இயற்கையாய் மெய்யொடுங் கெட்டுப் புணரும். |
எ-டு: மேல்வரும் சிறப்புச் சூத்திர உரையுட் காட்டப் பெறும். |
‘‘வந்து இடைநிலையும்’’ என்றதனான் ஆய்தம் வாராமல் ஒருபது, இருபது எனவும் நிற்குமென்க. |