சூ. 438 :

முதலீ ரெண்ணினொற்று ரகர மாகும்

உகரம் வருதல் ஆவயி னான 

(33)
 

க-து:

பத்தென்பதனொடு    புணருங்கால்    முதலிரண்டு    எண்ணுப்
பெயர்கட்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.
 

பொருள்:  பத்தொடு புணருமிடத்து முதல் நிற்கும்  ஒன்று,   இரண்டு
என்னும் ஈரெண்களில்     உள்ள    னகர   ஒற்று   ரகரமாகத்  திரியும்.
அவ்விடத்து ஓர் உகரம் வருதலைச் செய்யும்.
 

எ-டு:  ஒன்று + பத்து = ஒருபஃது எனவரும். இரண்டு என்னும் சொல்
அடுத்த நூற்பாவான் முடியும். அச்சூத்திரம் இதன் பின்னிரண்டு அடிகளாக
அமைந்து  ஒன்றாக  இருத்தல் வேண்டும். உரையாளரால் வழக்கு நோக்கி
இரண்டாக வைத்து உரை கூறப்பட்டது என்க.
 

‘‘பத்தொடு  புணருமிடத்து’’   என்பதனை இனிவரும் நூற்பாக்களொடும்
கூட்டிக்கொள்க.