சூ. 439 :

இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு 

நடைமருங் கின்றே பொருள்வயி னான  

(34)
 
க-து:

இரண்டு என்னும் எண்ணிற்கு எஞ்சிய திரிபு கூறுகின்றது.
 

பொருள்:  முற்கூறியவற்றுள் இரண்டு  என்னும்   எண்ணுப் பெயர்க்கு
உரித்தாக இடைநின்ற    ரகர    உயிர்மெய்தான்   அப்பொருளினிடமாக
நடைபெறுதலின்று. அஃதாவது  ணகர   ஒற்று   ருகரமாக   அப்பொருள்
பயத்தலின் இது கெடும் என்றவாறு.
 

எ-டு:  இரண்டு + பத்து = இருபஃது எனவரும்.