மூன்றன் ஒற்றே பகார மாகும்
மூன்றற்கும் ஆறற்கும் ரிய திரிபு கூறுகின்றது.
பொருள்: மூன்றும் ஆறும் ஆகிய எண்ணுப் பெயர்களின்நெட்டெழுத்து மாத்திரை குறுகி நிற்கும். அவற்றுள் மூன்று என்னும்பெயரின் னகரஒற்றுப் பகரமாகத் திரியும்.
எ-டு: மூன்று + பத்து = முப்பஃது; ஆறு + பத்து = அறு ஃதுஎனவரும். இவை இரண்டு சூத்திரம். உரையாசிரியர் ஒன்றாக வைத்துக்கூறுவர்.