ஐந்தன் ஒற்றே மகார மாகும்
ஐந்து என்னும் எண்ணுப் பெயர் திரியுமாறு கூறுகின்றது.
பொருள்: ஐந்து என்னும் எண்ணுப்பெயரின் நகர ஒற்று மகரஒற்றாகத் திரியும். எ-டு : ஐந்து + பத்து டி ஐம்பஃது எனவரும்.