சூ. 450 :

நமவ என்னும் மூன்றொடு சிவணி 

அகரம் வரினும் எட்டன்முன் இயல்பே  

(45)
 

க-து:

எட்டு்     என்னும்   எண்ணுப்பெயர்   இயல்புகணமாக  வரும்
அளவைப் பெயரொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்: எட்டு என்னும் சொல்லின்முன்  அளவுப்   பெயராக நமவ
என்னும் மூன்றொடு ஒத்து அகரமும், ஆகிய நான்கும் வரின்   இயல்பாகப்
புணரும்.
 

வரினும் என்னும் உம்மையை அகரமும்  எனக்   கூட்டுக.   அதனான்
சிறுபான்மை உகரமும் கொள்க. நமவஅ   என்றது   அவற்றை   முதலாக
உடைய அளவுப் பெயர்களை.
 

எ-டு: எண்ணாழி, எண்மண்டை, எண்வட்டி, எண்ணகல்,  எண்ணுழக்கு
எனவரும்.    உகரம்    எட்டுழக்கு   எனவும்   வருமாதலின்   அதனை
உம்மையாற்றழுவினார்.