ஐந்தும் மூன்றும் மெல்லின அளவைப் பெயரொடு புணருமாறு கூறுகின்றது.
பொருள்: ஐந்து, மூன்று என்னும் பெயர்கள் நகரமகர அளவுப்பெயர்கள் வருமிடத்து ஒற்றிலக்கணம், வந்த அவ் எழுத்துக்களை ஒத்து நிற்பதாகும்.
எ-டு: ஐந்நாழி - ஐம்மண்டை எனவும் முந்நாழி - மும்மண்டை எனவும் வரும். எதுகை நயம் நோக்கி ஐந்து முற்கூறப்பட்டது. அதனான் ‘‘ஐநாழி’’ எனச் சிறுபான்மை நகரங்குன்றி வருமேனும் கொள்க.