சூ. 455 :

முதலீ ரெண்ணின்முன் உயிர்வரு காலைத் 

தவலென மொழிப உகரக் கிளவி 

முதனிலை நீடல் ஆவயி னான  

(50)
 

க-து:

முதல்இரு  எண்ணுப்  பெயர்கள்   உயிர்   முதல்   அளவைப்
பெயர்களொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  ஒரு, இரு எனத்திரிந்து நிற்கும் முதல்  இரண்டு  எண்ணுப்
பெயர்களின் முன்னர் உயிர்முதல் அளவுப் பெயர்கள்  வருமிடத்து  இறுதி
உகரம்  கெடுமெனக்   கூறுவர்.   அவ்விடத்து   முதனிலையாக   நிற்கும்
எழுத்துக்கள் மாத்திரை நீடலைச் செய்யும்.
 

எ-டு: ஓரகல், ஓருழக்கு-ஈரகல், ஈருழக்கு எனவரும்.