சூ. 456 : | மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் |
| தோன்றிய வகரத் தியற்கை யாகும் |
(51) |
க-து: | மூன்று நான்கு ஐந்து ஆகிய எண்ணுப் பெயர்கள் உயிர்முதல் அளவுப் பெயரொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: மூன்று நான்கு ஐந்து என்னும் எண்ணுப் பெயர்கள் உயிர் முதலாகிய அளவுப் பெயர்வரின் மேல் வகரம் வருமிடத்திற்கு ஓதிய இயல்பினவாகும். |
அஃதாவது, மூன்றன் னகரம் வகரமாகவும் நான்கன் னகரம் லகரமாகவும் ஐந்தன் நகரம் கெட்டும் புணருமென்றவாறு. |
எ-டு: முவ்வகல், முவ்வுழக்கு எனவும்; நாலகல், நாலுழக்கு எனவும்; ஐயகல், ஐயுழக்கு எனவும் வரும். ஐவுழக்கு என வகரமாய்க் கெடாதும் வரும். |
ஐயகல், ஐயுழக்கு என்புழி யகரம் உடம்படுமெய்யென அறிக. |