க-து:
பொருள்: முன்னர்க் குறுகிநின்ற ஆறு என்னும் சொல்உயிர்முதலாகிய அளவுப்பெயர் வருங்கால் நீண்டுநிற்கும்.
எ-டு: ஆறகல் - ஆறுழக்கு எனவரும். ஏகாரம் இசைநிறை. நீடாதுநின்றவழி உடம்படுமெய் பெற்றுப் புணரவேண்டுதலின் நீண்டது.நீண்டவழிக் குற்றியலுகரமாய்விடுதலின் அதன்கண் உயிர் ஏறிமுடிந்தது.மூன்று, ஆறு எனத் திரிந்ததன் திரிபு அது என்னும் நயத்தாற்கூறப்பட்டன.