சூ. 46 :மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் 
(13)
 

க-து:

மெய்எழுத்துக்கள் தம்மை உணர்த்தும் முறைமை கூறுகின்றது.
 

பொருள்:  ஒலிப்பில்லாத நிலைமையையுடைய   மெய்யெழுத்துக்களின்
இயக்கம் அகரச் சாரியையொடு பொருந்திவரும்
 

என்றது ; மெய்யெழுத்துக்கள் தம்மைச்சுட்டி  உணர்த்த வருமிடத்து அ
என்னும் சாரியை இடைச்சொல்லைப்பொருந்தியே இயங்கும் என்றவாறு.
 

எ-டு : வல்லெழுத்தென்ப கசடதபற எனவரும்.  ஈண்டுக்  கசடதபற
என்பவை  உயிர்மெய்யை  உணர்த்தாமல்  இக், இச், இட்,  இத், இப், இற்
என்னும் புள்ளி மெய்யை உணர்த்தி நின்றன.
 

இச்சூத்திரம்    தனியெழுத்துப்பற்றிய     இலக்கணமாயினும்   அவை
அகரமாகிய சாரியை  இடைச்சொல்லொடு  கூடி,  மொழித்  தன்மையுற்றுப்
பிறபொருள் தருதலின் ஈண்டுக் கூறப்பட்டதென்க.
 

     

‘‘தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருள்

சுட்டுதற் கண்ணேயாம் சொல்’’
 

என்பதனான் எழுத்திற்கும் சொல்லிற்கும் வேற்றுமையறிக.
 

அகரம் சாரியையாங்கால் எழுத்தாகாது இடைச்சொல்லாகுமென்க.