சூ. 462 :நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா 
(57)
 

க-து:

நான்கு, ஐந்து என்பவை நூறென்பதனொடு புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:  நான்கு    ஐந்து     என்னும்    எண்ணுப்    பெயர்கள்
நூறென்பதனொடு புணருங்கால் ஒற்றாக நின்ற  னகரமும்  நகரமும்  வடிவு
திரியாமல் நிற்கும்.
 

எ-டு:  நானூறு-ஐந்நூறு எனவரும். நானூறு என்பதன்கண் நிலைமொழி
னகரக்கேடு   ‘‘நெடியதன்  முன்னர்’’   (தொகை-18)   என்னும்  விதியாற்
கெட்டதென்க.