ஒன்றுமுதல் ஒன்பானிறுதியாக உள்ள எண்ணுப் பெயர்கள் ஆயிரம் என்னும் சொல்லொடு புணருமாறு கூறத்தொடங்கி இச்சூத்திரத்தான் முதல் இரு எண்கள் ஆயிரத்தொடு புணருமாறு கூறுகின்றார்.
பொருள்:ஒரு இரு என விதியீறாக நின்ற முதலிரு எண்ணுப் பெயர்கள் ஆயிரம் என்னும் சொல் வருமிடத்து இறுதி உகரம் கெட்டுப் புணரும்.