சூ. 465 :முதனிலை நீடினும் மான மில்லை
(60)
 

க-து:

இவ்இரு பெயர்க்கும் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறிய  இரண்டு  எண்ணுப்  பெயரும்  ஆயிரத்தொடு
புணருங்கால் இறுதி  உகரம் கெடுதலொடு முதனிலையாக  நிற்கும் ஒகரமும்
இகரமும்  நீண்டு  நிற்பினும்  குற்றமில்லை.  எனவே,  முதனிலை  நீளும்
என்பது கருத்து.
 

எ-டு:  ஓராயிரம்-ஈராயிரம் எனவரும்.