சூ. 466 :மூன்றன் ஒற்றே வகார மாகும்

(61)
 

க-து:

மூன்றென்பது ஆயிரத்தொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  மூன்றென்னும் சொல்  ஆயிரம் என்பதனொடு புணருங்கால்
னகர ஒற்று வகரமாகத் திரியும்.
 

எ-டு:  முவ்வாயிரம் எனவரும்.  வகரம்   குறியதன்முன்  ஒற்றாதலின்
இரட்டித்துப் புணர்ந்தது.  முதனிலை  நீடினும்  என்பதனை  அதிகாரத்தாற்
கொண்டு மூவாயிரம் எனவருதலும் கொள்க.