சூ. 468 :ஐந்தன் ஒற்றே யகார மாகும் 
(63)
 

க-து : 

ஐந்தென்பது ஆயிரத்தொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  ஐந்து   என்னும்   எண்ணுப்   பெயரின்   நகர   ஒற்று
ஆயிரத்தொடு புணருமிடத்து யகரமாகத் திரியும்.
 

எ-டு: ஐயாயிரம்  எனவரும்.   நகரம்   திரியாமல்   கெடின்   யகர
உடம்படுமெய்    பெற்றுப்    புணர    வேண்டுதலின்   திரியுமென்றலே
சால்புடைத்தாதலறிக.