சூ. 47 : | தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும் |
| மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை |
(14) |
க-து: | நூன்மரபின்கண் உயிர்மெய்க்கண் நிற்கும் மெய்யொலிகளின் மயக்கங் கூறிய முகத்தான் இன்னபுள்ளி முன்னர் இன்னமெய்வருதற்கியலும் என மொழி நிலையும் உணர்ந்து கொள்ள வைத்தமையான் அம்மெய்கள் அகரமொடு சிவணித் தம்மை உணர்த்த வருங்கால் அம்மரபிற்றிரிந்துவரினும் இழுக்காகாதென மெய்கள் உடன்நிற்கும் நிலைபற்றியதொரு புறனடை கூறுகின்றது. |
பொருள்: மேற்கூறிய மெய்களின் தன்மை பற்றிய இலக்கணங் கூறுமிடத்துப் பதினெட்டு எழுத்துக்களும் நூன்மரபிற் கூறியாங்கு நிற்கும் நிலையின் மாறுபடுதல் குற்றமில்லை. |
எ-டு: | ‘‘அவற்றுள், லளகான் முன்னர் யவவுந் தோன்றும்’’ |
| ‘‘வல்லெழுத் தியையின் டகார மாகும்’’ எனவரும். |
இவற்றுள் ளகரப்புள்ளியொடு இணைந்து நிற்றற்கேலாத லகரமும், னகரப்புள்ளியொடு நிற்றற்கேலாத டகரமும் தம்மை உணர்த்த வந்தவழி இணைந்து நிற்குமாறு கண்டுகொள்க. |
மானம் என்பது மன் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்தசொல். (மன்"மான் + அம் = மானம். மன் = கழிதல்" போக்குதல்) இதனை ஆனம் எனப்பிரித்து அஃது ஹானம் என்னும் வடமொழித் திரிபெனமயங்குவாரும் உளர். |